அழிக்க முடியாமல்அடுத்தடுத்து
ஒன்றன் மீது ஒன்றுஅழுத்துகிறது...
ஒப்பனை முடிந்து பூசப்பட்ட வர்ணங்களை
உரிக்க முயன்று வரிவரியாய் எரிகிறது உடல்...
உளிகொண்டு
செதுக்கிய இடத்தில்வழிகிறது
உதிரம் சொட்டு சொட்டாய்...
காற்றுத் தூவிய மகரந்தத் துகள்கள்
சுடுமணலாய் கொதித்தது மனத்தழும்புகளில்...
ரோஜா இதழ்கள் சிதறிக் கிடந்தன
முட்கள் கீறிய புண்களில்...
இறக்கி வைக்க முடியாமல் கனக்கிறது
கடந்தகால நினைவுகள்...
அச்சமூட்டுகிறது
மனதைச் சுமந்தபடி திரியும் மனிதம்...
புல்வெளியெங்கும் புரண்டு
உடல் தேய்ந்து
நாவால் முதுகு வருடி
சில கணமாவது
மனமற்ற பாழ்வெளியில்
ஐந்தறிவு மிருகம் போல்
கிடக்கத் தவிக்கிறது
ஆறாவது அறிவு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெறியாட்டு
வெறியாட்டு (பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை) ப ளிச்சியம்மன் குடிகொண்ட கோயிலைச்சுற...
-
ஒவ்வொரு தேசமும் தனக்கென்று அருங்காட்சியகங்கள் வைத்திருப்பது போல, ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒர் அருங்காட்சி அறையை அவரவர் வீட்டில் அவரவர் வச...
-
தமிழில் குறும்படங்கள், ஆவணப் படங்கள் திரையிடுவதற்கும், ஊக்குவிப்பதற்க்குமான அமைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக சாத்தியப்படுகிற இத் தருணத்தில் அவற...
கவிதை முழுமையுமே ஆறாவது அறிவின் முழு வெளிப்பாடு!
பதிலளிநீக்கு