வியாழன், 17 ஜூன், 2010

ஒரு கணம்

அழிக்க முடியாமல்அடுத்தடுத்து
ஒன்றன் மீது ஒன்றுஅழுத்துகிறது...
ஒப்பனை முடிந்து பூசப்பட்ட வர்ணங்களை
உரிக்க முயன்று வரிவரியாய் எரிகிறது உடல்...
உளிகொண்டு
செதுக்கிய இடத்தில்வழிகிறது
உதிரம் சொட்டு சொட்டாய்...
காற்றுத் தூவிய மகரந்தத் துகள்கள்
சுடுமணலாய் கொதித்தது மனத்தழும்புகளில்...
ரோஜா இதழ்கள் சிதறிக் கிடந்தன
முட்கள் கீறிய புண்களில்...
இறக்கி வைக்க முடியாமல் கனக்கிறது
கடந்தகால நினைவுகள்...
அச்சமூட்டுகிறது
மனதைச் சுமந்தபடி திரியும் மனிதம்...
புல்வெளியெங்கும் புரண்டு
உடல் தேய்ந்து
நாவால் முதுகு வருடி
சில கணமாவது
மனமற்ற பாழ்வெளியில்
ஐந்தறிவு மிருகம் போல்
கிடக்கத் தவிக்கிறது
ஆறாவது அறிவு.

1 கருத்து:

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...