வியாழன், 4 ஆகஸ்ட், 2022

 

மைபொதி விளக்கு

 


நீர் ஊஞ்சல் ஆடியபடி

நதியோடு சல்லாபித்துக் கொண்டிருந்த

நிலவின் கருநிழல்

குளிரக்குளிரக் குளித்துக்கொண்டு இருந்தது

அடிமணலில்...

 

சிற்றெறும்பின் மெல்லுடலில்

மறைந்து மறைந்து ஊர்ந்து கொண்டிருந்தது

அதன் பெருநிழல்...

துண்டாடப்பட்ட இலையின் நிழல்

துளிக் காயமின்றி படபடத்துக்

கொண்டிருந்தது காற்றில்...

 

மின்மினிப் பூச்சிகள் உலவும்

இடுக்குகளிலும் வளைந்து மடங்கி

பறந்து கொண்டிருந்தது  ஒளிவட்ட நிழல்..

 

நிழலைப் பொசுக்கவே முடியாத குமைச்சலில்..

பிம்பங்களைச் சுட்டெரித்துக் கொண்டிருந்தது சூரியன்...

தனிமை என்னும் சொல்லை

பொருளற்றதாக்கி

பேரழிவு காலம் வரை பேரண்டத்தில்...

ஒவ்வொரு பரமாணுவும் வாழும்...

மைபொதி விளக்கென

அதனதன் நிழலோடு...

(தலைமைச் செயலக குறிஞ்சி மன்றம் நடத்திய கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை..26-05-2022 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...