வியாழன், 30 ஜூலை, 2015

மகத்தான மாமேதைக்கு கண்ணீரோடு கவிதாஞ்சலி


இராமேஸ்வரத்தின் கரையில்
எல்லோரும் மீன் பிடிக்க 
கடலோடியபோது
நீ மட்டும்
தூண்டிலோடு
விண்மீன்களைப் பிடித்துக்கொண்டிருந்தாய்

நெருப்பாற்றில் நீந்தியதால்
உன் முதுகில் முளைத்தன
அக்னிச் சிறகுகள்.....

உறக்கங்களைத் துறந்துவிட்டு
கனவுகளின் இமைத் திறக்க
ஒவ்வொரு நொடியிலும் கரைந்தாய் – இன்று
ஒவ்வொரு இந்தியனின்
கலையாத கனவாகி மறைந்தாய்

கலாம் என்பதை
காலம் என்றும் உச்சரிக்கலாம்
எல்லா காலத்துக்குமான
இணையற்ற ஆளுமை என்பதால்...

இனி-
பகுத்தறிவாளனும் சொல்லக் கூடும்
இராமேஸ்வரம் புனிதத் தலமென்று.....

4 கருத்துகள்:

  1. அருமையான அஞ்சலி......

    என்றும் அவரது பெயர் நிலைத்திருக்கும்.....

    பதிலளிநீக்கு
  2. உங்களது இக்கவிதையை எனது இன்றைய ஃப்ரூட் சாலட் பதிவில் “படித்ததில் பிடித்தது” தலைப்பில் சேர்த்து இருக்கிறேன். தங்களது தகவலுக்காக.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி .. தங்கள் வலைப்பூவில் வெளியிட்டமைக்கும் .. தகவல் தெரிவித்தமைக்கும்..

      நீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...