கற்றுக்கொண்டால் போயிற்று
என்ன பிரமாதம்
என்று கைவிடப்பட்ட வித்தைகள் ஏராளம்
விடிந்தால் முடித்துவிடலாம்
என்று தள்ளிப்போடப்பட்ட
காரியங்கள் அநேகம்
பொருத்திய இடத்தில்
சுற்றியபடி
நகர்ந்தன கடிகாரத்தின் முட்கள்
சுழன்ற இடத்திலேயே
சூரியனையும் சுற்றி
பகலையும், இரவையும்
விடியவும், சாயவும் வைத்தது பூமி...
தூக்கத்தையும், கனவுகளையும்
தின்று கொழுத்து கழிந்தன பொழுதுகள்
எதேச்சையாக எதிரில் சந்தித்த
அதிமுக்கியமான நபரிடம் சொன்னேன்
'நேரமே கிடைப்பதில்லை' என்று..
அணுவைப் பிளந்தவனுக்கும்,
ஆளப்பிறந்தவனுக்கும்
எல்லா நிமிடங்களும்
எப்படி சரியாக வாய்க்கின்றன
என்று வியந்தபடி
காலியாயின தேநீர்க் கோப்பைகள்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேந்திர ரத்னு கையால் பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியிட்ட பொழுது நினைவுப் ...

-
இன்னும் பத்து வருஷத்துக்கு உடம்புக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று வாங்கிய காசுக்கு வஞ்சனை இல்லாமல் வரம் தருகிறார் மருத்துவர...
-
மானிடவியல் ஆய்வென்பது எல்லா தேசத்திற்கும், எல்லா இனத்திற்கும் தேவையான ஒன்று. ஒரு பக்கம் தொல்லியல் ஆராய்ச்சியென்பது தனிமனி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>