வியாழன், 7 செப்டம்பர், 2023

 

எறும்புக்கும் காலம் வரும்

-நெய்வேலி பாரதிக்குமார்




ன்றி தனது சக நண்பன் வண்டுடன் காலாற நடந்து கொண்டிருந்தது.

               வர வர, இந்த எறும்புகளின் அட்டகாசம் தாங்கவே முடியவில்லைஎன்றது பன்றி.

               ஏன்? அவை என்ன செய்கின்றன?” கேட்டது வண்டு.

               மனிதர்களுக்கும், நமக்குமான வித்தியாசம் ஒழுங்கின்மைதான்... ஆனால், இந்த எறும்புகள் எங்கு சென்றாலும் வரிசையில் தான் செல்கின்றன. நாளைக்கு வேண்டும் என்று இன்றைக்கே சேமிக்கின்றன...கண்ட இடத்தில் புரள்வது, புரண்ட இடத்தில் உறங்குவது என்று சுதந்திரமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்க, ஏன் இந்த எறும்புகள் மட்டும் பிடிவாதம் பிடிக்கின்றன?”

               உண்மைதான் மனிதர்களே ஒழுங்கைக் கடைபிடிக்காமல் கண்ட இடத்தில் காரித் துப்புகிறார்கள். நம்மைப் போல் மாறிக் கொண்டு இருக்கிறார்கள், இந்த எறும்புகளுக்கு ஏன் அதிகப் பிரசங்கித்தனம்?” என்று சலித்துக்கொண்டது வண்டு.

               நான் கூட எத்தனையோ முறை வரிசையில் புகுந்து கலைத்துப் பார்த்து விட்டேன். மறுபடி மறுபடி அதே வரிசையில் செல்கின்றன. ஒருவேளை அவை யாவும் பிறவிக் குருடர்களா?” என்றது பன்றி. அப்பொழுது அந்த வழியே தனது இரையைச் சிரமப்பட்டு இழுத்துக் கொண்டு வந்தது ஒரு எறும்பு.

               பன்றி அதைப்பார்த்ததும், கேலியாக, “இந்த வாழ்க்கை நிலையற்றதாக இருக்கிறது நாங்கள் எதையும் சேமிக்காமல், இருக்கிறோம்... நீ ஏன் இத்தனை சிரமப்படுகிறாய்?”

               உழைப்பே பிரதானம்... ஒழுங்குக் கட்டுப்பாடுகளே உயிர் மூச்சு என நாங்கள் அன்றாடம் இயங்குவதால் நாங்கள் இனிப்பானவற்றை இழுத்துச் செல்கிறோம். ஒழுங்கற்ற சோம்பேறிகளான நீங்கள் உருட்டிச் செல்வதும், விரட்டிச் செல்வதும் எதை என்று யோசித்தீர்களா?” என்று கேட்டது எறும்பு.

               திகைத்துப்போன பன்றியும், வண்டும், “உழைப்பதாலும், கட்டுப்பாடுகளாலும் என்ன சாதித்து விடப் போகிறாய்?”

               விலங்காக இருப்பினும் பிற உயிர்களைக் கொன்று பிழைக்காத குரங்குகள் பரிணாம வளர்ச்சியில் மனிதர்களானது போல், என்றேனும் ஒருநாள் நாங்களும் மனிதர்களாகலாம்... ஏன் மனிதர்களைக் கூடக் கடந்து செல்லலாம்...என்றபடி, எது மாறினாலும் நிலை மாறாமல் தமது இரையை இழுத்துக் கொண்டு சென்றது எறும்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...