வெள்ளி, 17 ஜூன், 2022

 



புகைவண்டி இருக்கைகள்

-          நெய்வேலி பாரதிக்குமார்

தன்னுள் ஏறாத மரங்களையும்

எதிர்திசையிலிருந்து

இழுத்தபடி

எல்லா வயதினரையும்

ஏற்றிக் கொண்டு ஓடுகிறது

புகைவண்டி.

 

முன் பதிவு செய்யப்படாத பெட்டிகளில்

எவருக்குமே ஒதுக்கப்படுவதில்லை

இன்னின்ன இருக்கைகள் இன்னாருக்கென்று....

என்றாலும்

அமைந்துவிடுகின்றன அவரவருக்கான

இருக்கைகள்.

 

 

 

ஐஸ்க்ரீமையோ லாலிபாப்பையோ

சுவைத்தபடி இருக்கும் குழந்தைகளுக்கு

ஜன்னலோரம்...

 

பேப்பர் படிக்கும் அப்பாவுக்கு

எப்பொழுதும் ஒற்றை இருக்கை

அரைக்கால்சட்டை தம்பிகளுக்கு

லக்கேஜ் ஒன்லி'யில் படுக்கை

 

நடைபாதைகளில்

ஊர்திரும்பும் கூடைக்காரர்கள்...

 

இறங்கும்வழிக் கதவோரம்

சோகம் ததும்பும் புகைஞர்களுக்கு...

படி படி' என்று

எல்லோரும் நச்சரிப்பதால்

படி தாண்டுவதில்லை பதின்மர்கள்.

 

அரங்குகளிலோ

அவைகளிலோ

ஒருபோதும் விரும்பப்படாத

இரும்பு இருக்கைகள்

எப்படியோ பிடித்துப் போய்விடுகின்றன

இரயில் பெட்டிகளில் மட்டும்.

 

ஒருபோதும் பயணித்ததில்லை

இறுதிவரை இருக்கை மாறாமல்

இரயில் பயணங்களில்.

 

கடைசி இரயில்நிலையத்தில்

எல்லோரையும் இறக்கி விட்டுவிட்டு

பிரிய மனமின்றி

பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும்

புகைவண்டிகளின்

இருக்கைகளில்  நிரம்பியிருக்கின்றன

எல்லா வயது' இதயங்களும்...

!

 

 

               

 

               

               

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...