புதன், 22 ஜூன், 2022

 

கல்கி இதழில் வெளியான கட்டுரை 





இந்திய சினிமாவின் முதலும் சிலமுதல்'களும்

                                                                -நெய்வேலி பாரதிக்குமார்

 

                மும்பையின் கிர்கான் பகுதியிலிருக்கும் காரனேஷன் வெரைட்டி ஹால் மே-3, 1913, சனிக்கிழமை மாலை புதிய சகாப்தத்தின் துவக்க நாள் பொலிவுடன் திகழ்ந்தது. அதுவரை நடிகர்கள் நேரடியாகப் பங்கேற்கும் நாடகங்கள் நிகழ்த்தப்பட்ட அந்த அரங்கில் அன்று தான் இந்தியாவின் முதல் முழுநீள சலனப்படமானராஜா ஹரிச்சந்திரா' திரையிடப்பட்டது. இந்த மே மாதம் மிகச் சரியாக 100 ஆண்டை எட்டிவிட்டது இந்திய சினிமா.

                அதற்கு முன்னர் வரை சிறுசிறு கூடாரங்களில் குறைந்த நீளமுடைய படங்கள் திரையிடப்பட்டு வந்தாலும், ஒரு முழுநீள கதையை அன்றுதான் இந்திய மக்கள் திரையில் காண முடிந்தது.

                சுமார் நாற்பது நிமிடங்கள் ஓடக்கூடிய அளவு (3,700 அடி)தயாரிக்கப்பட்டராஜா ஹரிச்சந்திரா'வின் முதல் ரீல் மற்றும் கடைசி ரீல் பிரதிகள் மட்டும் பூனே திரைப்பட வளர்ச்சிக் கழகத்தில் இருக்கின்றன.

                ராஜா ஹரிச்சந்திரா' திரைப்படத்தில் பெண் கதாபாத்திர வேடத்தில் நடிப்பதற்காக படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான தாதா பால்கே சாஹேப் மும்பை முழுக்க சல்லடை போட்டுத் தேடினார். திருவிழாக் கூத்துக்களில் நடிக்கக் கூடிய பெண்கள், விலைமாதர்கள், வேலைக்காரப் பெண்கள் என்று பலரையும் தேடிக் கேட்டபோது அவர்கள் மறுத்து விட்டனர்.

                பால்கே அடிக்கடி சாப்பிடப்போகும் ஹோட்டல் ஒன்றில் சமையல் காரரின் உதவியாளராகவும் சில சமயம் சர்வராகவும் பணியாற்றிய சலுங்கே'வின் பெண்மை கலந்த முகம் அவரை வெகுவாகக் கவர்ந்தது. தனது திரைப்படத்தில் ஹரிச்சந்திராவின் மனைவி தாராமதி கதாபாத்திரத்துக்கு அவர்தான் பொருத்தமானவரென்று தீர்மானித்தார். பெண் வேடத்தில் நடிக்க சலுங்கே சம்மதித்ததற்கு முதல் காரணம் பால்கே அவருக்கு மாதச் சம்பளம் பத்து ரூபாய் தருவதாக சொன்னதுதான்.

                மிக விரைவில் நடிப்பின் நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொண்ட சலுங்கே, கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்கள் முப்பது படங்களுக்கு மேல் ஆண் மற்றும் பெண் கதாபாத்திரங்களில் நடித்தார். பால்கேவின் இரண்டாவது படமானமோகினி பஸ்மாசூர்' (1914)-ல் துர்க்காபாய் கோகலே மற்றும் அவரது மகள் கமலாபாய் கோகலே என்ற இருபெண்கள் முதன் முதலாக நடிக்க முன்வந்தனர். அவர்கள் தான் இந்திய சினிமாவின் முதல் நடிகைகள்.

                என்றாலும், சலுங்கேவின் நடிப்புத் திறன் மெருகேறி அவருக்கென்று சில ரசிகர்கள் இருப்பதாக உணர்ந்த பால்கே, 1917-ல் தான் எடுத்தலங்கா தகன்' என்ற படத்தில் இராமன் மற்றும் சீதை ஆகிய இரு வேடங்களிலும் அவரையே நடிக்க வைத்தார். முதன் முதலாக ஆண் மற்றும் பெண் ஆகிய  இரட்டை வேடங்களில் நடித்தவர் சலுங்கே தான். அதோடு மட்டுமல்ல, ராஜா ஹரிச்சந்திரா படத்தை மீண்டும் இரண்டாவது முறையாகப் 1917-ல் படமாக்கியபோது, நடிகைகள் பலர் இருந்தும்  சலுங்கேவையே தாராமதி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் பால்கே.

                இனி, இந்திய சினிமாவின் சிலமுதல்'களைப் பற்றிக் காண்போம்.

                1907-ம் ஆண்டு கல்கத்தாவில் ஜாம்ஷெட்ஜி மதன் என்பவர் எல்பின்ஸ்டன் பிக்சர் பேலஸ் என்கிற சினிமா தியேட்டரைக் கட்டினார். அதுதான் இந்தியாவின் முதல் திரையரங்கம்.

                சென்னையில் திரு.வெங்கய்யா மற்றும் ஆர்.எஸ்.பிரகாஷ் ஆகியோரால் கட்டப்பட்ட கெயிட்டி தியேட்டர்தான் (1914) அனேகமாக தென்னிந்தியாவின் முதல் திரையரங்கமாக இருக்கக் கூடும்.

                1916-ல் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர்கீசக வதம்' என்ற சலனப்படத்தை தயாரித்தார். 1920-ல்தான் பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய நகர்களில் திரைப்பட தணிக்கைக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டன.

                பம்பாய் கோஹினூர் ஸ்டூடியோ 1921-ல் தயாரித்தபகத் விதூர்' என்ற திரைப்படத்தில் ஸ்டூடியோவின் உரிமையாளர் துவாரகதாஸ் சம்பத்தே அந்த படத்தில் காந்தியாக நடித்தார். அரசியல் காரணங்களுக்காக அந்த படம் அன்றைய பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டது. இந்திய சினிமா வரலாற்றில்பகத் விதூர்தா'ன் முதன் முதலாக தடை செய்யப்பட்ட படம்.

                1931-ஆம் ஆண்டு வரை மௌனப்படங்களாக இருந்த இந்திய சினிமா உலகில் அர்தேஷி இரானி இயக்கி 1931, மார்ச் 14-ல் வெளிவந்தஆலம் ஆரா' தான் இந்தியாவின் முதல் பேசும் படம். அந்த படத்தில் இடம் பெற்றதே தே குதா கே நாம்' என்கிற பாடல்தான் இந்தியாவின் முதல் திரையிசைப்பாடல். பாடியவர் வசீர் மஹம்மது கான்.

                1932- ல் வெளிவந்தஇந்திர சபா' திரைப்படத்தில் மொத்தம் 71 பாடல்கள் இடம் பெற்றன. இன்றுவரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. பாடல்களே இல்லாமல் வெளிவந்த முதல் படம்நவஜவான்' (1937)இந்தியாவின் முதல் வண்ணத் திரைப்படம்கிஸான் கன்யா' ( 1937)

                1964-ல் வெளிவந்தயாரெனின்' என்ற படத்தில் சுனில் தத் மட்டுமே நடித்திருந்தார். படத்தில் வேறு கதாபாத்திரங்கள் இல்லை. மிக நீளமான படம் LOC  கார்கில் சுமார் 4 மணி 25 நிமிஷம். இரண்டாவது இடம்மேரா நாம் ஜோக்கர்' படத்துக்கு 4 மணி 14 நிமிஷம்.

                அப் துமாரா ஹவாலே வாதன் சாத்யன்' என்ற பாடல் சுமார் 20 நிமிடம் ஓடக்கூடிய மிக நீளமான திரையிசைப் பாடல் ( படத்தின் தலைப்பும் அதுதான்). ‘தில் வாலே துல்ஹானியா லே ஜாயெங்கே' என்ற படம்தான் மிக அதிக நாட்கள் ( ஐந்து வருடங்கள்) திரையரங்கில் ஓடிய படம்.

                சர்வதேச விருது பெற்ற முதல் இந்திய திரைப்படம்சந்த் துக்காராம்'. 1936-ல் வெளிவந்த அந்த படத்துக்கு வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருது கிடைத்தது. பானு அத்தேயாதான் முதல் ஆஸ்கார் விருது பெற்றவர். காந்தி படத்தில் சிறந்த ஆடை வடிவமைப்புக்காக அவருக்கு அந்த விருது கிடைத்தது.

                தமிழின் முதல் பேசும் படம்' காளிதாஸ்' 1931இல் வெளிவந்த அந்த படத்தில் வசனம் தமிழிலும், பாடல்கள் தெலுங்கிலும் இருந்தன.இதில் அறிமுகமான டி.பி.ராஜலட்சுமி பின்னாளில் தமிழின் முதல் பெண் இயக்குனராக திகழ்ந்தார்.

                முதல் தெலுங்கு மொழி பேசும் படம்பக்த பிரகலாதா' (1931)

                முதல் மலையாள மொழி பேசும்படம்பாலன்' (1938)

                முதல் கன்னட மொழி பேசும்படம்பக்த துருவா' (1934)

                முதன்முதலாக ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய திரைப்படம்மதர் இந்தியா' (1957)

               

                சலனப்படங்களை இந்தியாவில் திரையிட முயற்சித்தவர்களில் மிக முக்கியமான இடம் கோவையைச் சார்ந்த வின்சென்ட் சாமிக்கண்ணுவுக்குத்தான் உண்டு. ‘ராஜா ஹரிச்சந்திரா' வருவதற்கு முன்பாகவே அவர் 1905 ஆம் ஆண்டு இரயில்வே துறையில் இருபத்தி ஐந்து ரூபாய் சம்பளத்தில் ட்ராஃப்ட்ஸ்மேனாக வேலை பார்த்தபோது ஃபதே என்கிற புரஜெக்டர் கம்பெனியின் பிரதிநிதிடூபாண்ட்' என்பவரை சந்தித்தார். அவரிடமிருந்த ‘Life of jesus' என்ற படத்தின் படச்சுருள்கள் மற்றும் திரையிடல் கருவிகளையும் 2000 ரூபாய்க்கு வாங்கினார். சினிமாவின் பொருளாதார சாத்தியக்கூறுகள் பற்றிய எந்த உறுதிப்பாடும் இல்லாத அந்த காலத்தில் அந்ததுறையின் மீதான அதீதமான நம்பிக்கையின் பேரில் தான் பார்த்துவந்த இரயில்வே வேலையை விட்டுவிட்டு ஊரூராக சென்று இன்றைய சர்க்கஸ் கம்பெனிகளைப் போல் கூடாரம் அடித்து (டெண்ட்) திரையிட்டார்.

                பின்னாளில்வள்ளித் திருமணம்' போன்ற படங்களை தயாரித்த சாமிக்கண்ணு  கோவையில் கட்டியவெரைட்டி ஹால்' (இன்றைய டிலைட்) தமிழகத்தின் இரண்டாவது திரையரங்கம்.

                தென் இந்திய சினிமாவில் அசைக்க முடியாத தனி இடம் வின்சென்ட் சாமிக்கண்ணுவுக்கு உண்டு. அவர் திரைப்பட முயற்சிகளைத்தாண்டி மின் அச்சகம், மின் உற்பத்தி நிலையம் என்று பல தொழில் நுட்ப சாதனைகளையும் கோவையில் நிகழ்த்தியவர். அதிகம் கவனிக்கப்படாத அவரைப்பற்றி தியோடர் பாஸ்கரன், இயக்குனர் செந்தமிழன் (பாலை), நியாஸ் அகம்மது போன்றோர் எழுதியும் பேசியும் வருகிறார்கள். அவரது அசாத்திய சாதனைகள் பற்றி வரலாற்றில் பதிவு செய்யவேண்டியதும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டியதும் நம்கடமை. 

               

               

               

               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...