செவ்வாய், 22 மார்ச், 2011

பெண்மையைப் போற்றுவோம்...

பெண்மை



விடிய, விடிய மேட்ச் பார்த்துவிட்டு 
தூங்குபவனை எழுப்பினால்,
கையிலிருக்கிறது ‘கேஷுவல் லீவ்'
என்றபடி புரள்கிறான்...
‘தலைவலிக்கிற மாதிரி இருக்கு.......'
துணை செய்கிறது மெடிக்கல் லீவு...
‘ஏர்ன் லீவ்' மிச்சமிருக்கு என்றபடி
கூட்டாளிகளோடு ‘டூர்' போகிறவனை
கையசைத்து அனுப்பிவிட்டு
விடுப்பில்லா அடுப்படியில்
புகைகிறது பெண்மை.


33

ஒன்றுமேயில்லாத கருவாயிருந்த
உங்கள் இருப்பை
நிலைநிறுத்தத் தந்தோம்
கருப்பையில் நூறு சதம்
இப்பொழுது உங்களிடமே
கையேந்தி நிற்கிறோம்
இருக்கையில் முப்பத்திமூன்று சதத்துக்கு.


தேர்ச்சி

கணிதத்தோடு போராடுகையில்
வருகிறதொரு குரல்...
‘ஒரு குடம் தண்ணி பிடிச்சு
உள்ளே வையேன்'
அறிவியலோடு உரையாடுகையில்
‘அடுப்படியில் கூட நிக்காம
எப்படி நீ குப்பை கொட்டப் போறே?'
வரலாற்றைப் புரட்டும்போது
புரட்டியெடுக்கிறது
மாதாந்திர வலி...
இருப்பினும் ஒவ்வொரு வருடமும்
தலைப்புச் செய்திகளில் தவறாமல்
‘இந்த வருடமும் மாணவிகளின் தேர்ச்சி சதம் அதிகம்'!

வியாழன், 10 மார்ச், 2011

காற்றில் உன் குரல் - அத்தியாயம்: 5

உன் குரல்:

பொருட்களற்ற அறையில் பேசினால் எதிரொலி கேட்குமே... அது போல இந்த இருட்டறையில் என் மனசாட்சியின் குரல் கூட எதிரொலித்தபடி இருக்கிறது. யாருமற்ற தனியறையில் பேசத் துவங்குகிறேன். கடவுளுக்குக் கேட்கக் கூடும். ஒருவேளை நீங்கள் பிற்காலத்தில் இதனை கேட்பீர்கள் என நம்புகிறேன். காற்றின் அலைகளில் நாம் பேசிய பேச்சுக்கள் எல்லாம் அழியாமல் சுற்றிக் கொண்டேயிருக்கும். என்றாவது எதிர்காலத்திலொருநாள் அவற்றை மறுபடி இனம் கண்டு யார் வேண்டுமானாலும் கேட்கும் காலம் வரலாம். அப்போது கேட்பீர்கள் என்று காற்றில் என் குரலைப் பதிவு செய்கிறேன்.

புதன், 9 மார்ச், 2011

காற்றில் உன் குரல் - அத்தியாயம்: 4



உன் தோழன்

       வேறொரு உருவாய்
       உருமாற முடிந்தால்
       ஏதேனும் ஒரு வண்ணத்துப் பூச்சிக்கு
       சிறகாக...
       ஏதேனும் ஒரு பூஞ்செடிக்கு
       வேராக...
       இருப்பேன் சுமைகளற்று...
       பறந்தோ...
       மறைந்தோ...

           parjana2003@yahoo.com

மின்னஞ்சல் தளம் திரையில் விளம்பரப்படங்களின் நடுவே ஓடிற்று. இதுவும் நீ உனக்கே அனுப்பி வைத்த மெயில்தான்.

திங்கள், 7 மார்ச், 2011

காற்றில் உன் குரல் - அத்தியாயம்: 3

உன் காதலி:

     “கடவுள் வரைந்த
     ஒரே ஓவியம்
     நீ!”

அலைபேசியை மெல்ல உயிர்ப்பித்தேன். உன் முகமும் வரிகளும் தெரிந்தது. அடிக்கடி எல்லாக் காதலர்களும் சொல்லும் வசனத்தை நீயும் சொல்வதுண்டு. “நான் மரணமடைந்து விட்டால் நீ வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்” என்பதுதான் அது.

ஞாயிறு, 6 மார்ச், 2011

காற்றில் உன் குரல் - அத்தியாயம்: 2

உன் அப்பா

     என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க:
     பன்னிரு விழியால் பாலனைக் காக்க


எஸ்.டி.டீ. பூத்தில் கால் கடுக்க முகத்தில் வழிந்த வியர்வைத் துளிகளைத் துடைத்தபடி நின்றிருந்தேன். முன்பு போல் என்னால் ஒரு இடத்தில் நிற்க முடியவில்லை. தள்ளாமை என்னைப் படுத்துகிறது. வாய் மட்டும் சஷ்டியை முணுமுணுத்தபடி...

சனி, 5 மார்ச், 2011

காற்றில் உன் குரல் - அத்தியாயம்: 1

இளைய பாரதத்தினாய் வா வா வா
 எதிரிலா வலத்தினாய் வா வா வா

உன் தங்கை:


பிரியத்துக்குரிய அண்ணா,

எப்படியிருக்கிறாய்? சுகமற்றிருந்தாலும் பரவாயில்லை, இரு. இன்னும் பல வருடங்கள் இரு. வெளிநாட்டுக்குப் போனவர்கள் எல்லோரும் பார்சல் பார்சலாக அனுப்புவதுதான் இங்கு சம்பிரதாயம். உன்னால் அனுப்ப முடியாவிட்டாலும் பரவாயில்லை... நீயே பார்சலாக வந்துவிடாதே... பிரிப்பதற்கான துணிச்சல் எங்களுக்கு இல்லை...

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...