கண்டதைக் கிழிக்கலாம்...
கண்டபடி திட்டலாம்...
காறி உமிழலாம்..
சூழலின் ஐளனத்தை உதறி
குமுறிக் குமுறி ஆழலாம்
மணல்வெளியில் மணிக்கணக்காய் புரளலாம்...
உடைகளற்றுத் திரியலாம்...
கூத்தாடி கூத்தாடி கையில் பட்டதை
போட்டுடைக்கலாம்...
கால் தடுக்கிய கல்லை
நையப் புடைக்கலாம்..
தோன்றும் போதெல்லாம் உரக்க சிரிக்கலாம்
சூரியனுக்கு நேராய் திமிராய் உறங்கலாம்...
நிலவொளியில் குபீரென
குளத்தில் குதிக்கலாம்...
துயரங்களின் துரத்தல்களிலிருந்து
தப்பித்து திரியலாம்
பைத்தியமாகும் வரம் மட்டும்
கடவுளிடம் கிடைத்துவிட்டால்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார் அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...

-
மானிடவியல் ஆய்வென்பது எல்லா தேசத்திற்கும், எல்லா இனத்திற்கும் தேவையான ஒன்று. ஒரு பக்கம் தொல்லியல் ஆராய்ச்சியென்பது தனிமனி...
-
ஒவ்வொரு தேசமும் தனக்கென்று அருங்காட்சியகங்கள் வைத்திருப்பது போல, ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒர் அருங்காட்சி அறையை அவரவர் வீட்டில் அவரவர் வச...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>