செவ்வாய், 13 ஜூலை, 2010

நேரமே இல்லை..

கற்றுக்கொண்டால் போயிற்று
என்ன பிரமாதம்
என்று கைவிடப்பட்ட வித்தைகள் ஏராளம்

விடிந்தால் முடித்துவிடலாம்
என்று தள்ளிப்போடப்பட்ட
காரியங்கள் அநேகம்

பொருத்திய இடத்தில்
சுற்றியபடி
நகர்ந்தன கடிகாரத்தின் முட்கள்

சுழன்ற இடத்திலேயே
சூரியனையும் சுற்றி
பகலையும், இரவையும்
விடியவும், சாயவும் வைத்தது பூமி...

தூக்கத்தையும், கனவுகளையும்
தின்று கொழுத்து கழிந்தன பொழுதுகள்

எதேச்சையாக எதிரில் சந்தித்த
அதிமுக்கியமான நபரிடம் சொன்னேன்
'நேரமே கிடைப்பதில்லை' என்று..

அணுவைப் பிளந்தவனுக்கும்,
ஆளப்பிறந்தவனுக்கும்
எல்லா நிமிடங்களும்
எப்படி சரியாக வாய்க்கின்றன
என்று வியந்தபடி
காலியாயின தேநீர்க் கோப்பைகள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...