செவ்வாய், 21 ஜூன், 2022

 

என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான நட்சத்திரங்களைத் துணைக்கழைப்பவள் நூலுக்கு நான் எழுதிய என்னுரை 


தனிமையை இரசித்தல்

-    நெய்வேலி பாரதிக்குமார்

 

இரவு நேரத் தனிமையில் வானத்தை உற்று நோக்கியபடி நிமிடங்களைக் கடக்கும் அரிய தருணம் எல்லோருக்கும் வாய்த்திருக்கும்.. சுகமான தனிமை என்பது  எவருக்கும் எளிதில் அருளப்படாத அற்புத வரம். .’தனிமையை இரசித்தல்’ ஒரு தவம் போல...

எல்லோருக்கும் சுயபிம்ப  வட்டமும் தலைக்குப் பின்னே சுழலும், கண்களறியா ஒளி வட்டமும் மிகப்பெரிதென கற்பிதம் செய்து கொள்வதில்தான் எத்தனை ஆனந்தம்? உண்மையில் குளத்திலும், அகன்று பரவி வரும் ஆற்றிலும் பூக்கும் நீர் வட்டம் போலத்தான் எல்லா வட்டமும்... ஒரு கணம் திடுக்கிட்டுப் பரவும் பரவசத்தைத் தவிர வட்டங்கள் உணர்த்தும் அனுபவம் வேறெதுவும் இல்லை....

வட்டம் எத்தனைப் பெரிதாயினும் அதில் நம் தனிமை என்பது எப்பொழுதும் கரையாதது. படைப்பாளிகளைப் பொறுத்தவரை தனிமை என்பது விரும்பி ஏற்கும் விருந்து. தனிமை என்பது ரசிக்க ரசிக்கப் பெருகுவது.

ஒரு சிறுமியின் பூ தொடுத்தல் போல ‘தனிமை’ எண்ணங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு சலியாமல் கோர்த்துக் கொண்டே இருக்கிறது. அவரவர் கைகளில் அவரவர் மாலை.

மின்னலில் இருந்து மின்சாரம் எடுப்பதும், மின்சாரத்தின் வழியே மின்னலை ஏற்படுத்துவதும் அறிவியல் உலகில் சாத்தியமா என்பது இன்னமும் புதிரான ஒன்றாக இருக்கலாம். ஆனால் படைப்பாளிகளின் உலகில் இரண்டும் சாத்தியமே.. கவிதையோ, சிறுகதையோ வெளிச்சப்புள்ளிகள் ஒன்று கூடி தன்னளவில் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.  எனது இந்த மூன்றாவது சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் அவ்வாறு புறவுலகம் என்னை புறந்தள்ளி அந்தத் தனிமையில் முகிழ்த்தவையே

வாசிக்கும் எல்லோருக்கும் எல்லா படைப்புகளும் உன்னத அனுபவங்களை தர வல்லவை என்று சொல்லிவிட முடியாது. அவரவர் முனைப்பில் அவரவர் அனுபவம்.. இதிலுள்ள கதைகளை போட்டிகளில் சிறந்தவையாக தேர்வு செய்த அல்லது பிரசுரம் செய்த இதழ்கள் கிழக்கு வாசல் உதயம், கல்கி, பேசும் புதிய சக்தி, குமுதம், சங்கு, சௌந்திர சுகன், இராமகிருஷ்ண விஜயம், இலக்கிய பீடம், நிறை, பல்லவி ஆகிய இதழ்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகளை இத்தருணத்தில் சமர்ப்பிக்கிறேன்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பினை அழகுற உருவாக்கி இருக்கும் அன்னை இராஜேஸ்வரி பதிப்பகத்தின் உதயக்கண்ணன் மற்றும் எஸ். சங்கர நாராயணன் அவர்களுக்கும் என் நெகிழ்வான நன்றிகள்..

அன்பின் அம்மா சாந்தாவுக்கும், எனது எல்லா இலக்கியச் செயல்பாடுகளுக்கும் துணை நிற்கும் எனது மனைவி ஆதிலட்சுமி என்கிற நிலாமகளுக்கும், எனது பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய எனது பிள்ளைகள் பிருத்வி மதுமிதா, எனது மகன் சிபிக்குமார், மற்றும்  புகைப்படக் கலைஞர் என். செல்வன், ஓவியர் கோவிந்தன் ஆகியோருக்கும்...

என் எழுத்துக்களை வாசித்து பாராட்டும்  அன்புக்கினிய நண்பர்கள் பா. உஷாராணி, கிருஷ்ணப்பிரியா, ஜெயஜோதி, தனலட்சுமி பாஸ்கரன்,  கவிஞர் இயற்கை, குறிஞ்சிவேலன், குறிஞ்சி ஞான.வைத்தியநாதன். தேன்தமிழன் , ஸ்ரீவித்யா நடராசன் ஆகியோருக்கும் மிகக் குறைவான நேரத்தில் நூலை மெய்ப்புத் திருத்தி உதவிய இலக்கியச் சங்கமம் இராதாகிருஷ்ணன் மற்றும் எப்பொழுதும் என்னை உற்சாகப்படுத்தும் இலக்கியச் சங்கமம் நடராசன்  பல்லவிகுமார், மருதூர் அரங்கராசன், வெ.தி சந்திரசேகரன் தேன்தமிழன், சு. பாண்டியன், ப. கோவிந்தராசு  ஆகியோருக்கும்..

திரைப்பட ஒளிப்பதிவாளர் அன்புக்குரிய சகோதரர் திரு.சி.ஜெ. இராஜ்குமார் அவர்களுக்கும், என் படைப்புலக வாழ்வில் புதிய வழித்தடங்களை உருவாக்கிக் கொண்டே துணை இருக்கும் திரு வேல்முருகன் (இயக்குநர் பாரதிராஜாவின் உதவி இயக்குனர்) அவர்களுக்கும்,  நிழல் திருநாவுக்கரசு  மற்றும் எடிட்டர் தேவராஜ் மணவாளன் அரியலூர் டி.எஸ்.பி.ஆகியோருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

என் நூல்கள் வெளிவரும்தோறும் அவற்றுக்கு ஒரு விமர்சன அரங்கை அமைத்துத் தருகிற செஞ்சி குறிஞ்சி இலக்கிய வட்டத் தோழர் ஜெ.ராதாகிருஷ்ணன், அவரது நண்பர்கள் செந்தில்பாலா, பேராசிரியர் நெடுஞ்செழியன், தமிழினியன், நினைவில் வாழும் செஞ்சி செல்வன், ஆகியோருக்கும் என் நன்றிகள்.

ஆத்மார்த்தமான இலக்கிய நட்புக்கு இலக்கணமான ,நளினி சாஸ்திரி  மற்றும் , மாலா உத்தண்டராமன் ஆகியோருக்கும், உறவு தாண்டிய தோழமைகள் திரு பிருத்விராஜ், சிங்காரவேலு, மூர்த்தி, கோவிந்தராஜ் சிவசங்கர் ஆகியோருக்கும்

இந்த நூலுக்கான வடிவமைப்புப் பணியினை  செய்த கதிரவன் அவர்களுக்கும் அச்சிட்ட அச்சக ஊழியர்களுக்கும் என் வணக்கத்துக்குரிய நன்றிகள்.  . 

                நான் பணியாற்றும் என்.எல்.சி. நிறுவனத்துக்கும், எனக்குத் தமிழூட்டிய ஆசிரியர் பெருமக்களுக்கும், எனை உயிர்ப்போடு வைத்திருக்கும் என் இனிய தமிழுக்கும் என் இதயம் நெகிழ்ந்த நன்றிகள்..  

     எனது மகள் மருத்துவர் பிருத்வி மதுமிதா எனது மாப்பிள்ளை பொறியாளர் க. அஸ்வின் பிரகாஷ் அவர்களின் கரம் பிடித்து இல்லறம் புகும் இந்த நல்ல நாளில் இந்தத் தொகுப்பை அவர்களது கரங்களால் வெளியிடும் தருணம் என் வாழ்வில் மகத்தானது மாப்பிள்ளை அஸ்வின் பிரகாஷ் மற்றும் எனது சம்பந்தி திருமிகு கண்ணபிரான் மற்றும் வசந்தி கண்ணபிரான் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

மிக்க அன்புடன்

                                                நெய்வேலி பாரதிக்குமார்,

இடம் ; நெய்வேலி – 2

அலைபேசி எண் : 94424 70573, 88257 53498, 04142- 257989.

sbharathikumar@gmail.com, www.bharathikumar.blogspot.com.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சமர்ப்பணம்

என் வாழ்வில் எப்பொழுதும் அரிய, மகிழ்வான, நெகிழ்வான தருணங்களை உருவாக்கித் தந்துகொண்டிருக்கும்   சகோதரர் குறியாமங்கலம் செல்வத்திற்கும் திருமதி மீனாட்சி செல்வத்திற்கும்...

      

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...