வியாழன், 23 ஜூன், 2022

 

 





பாரதிக்குமார் பெற்ற பரிசுகள்.. விருதுகள், பங்களிப்புகள்

1.   தினமணிக்கதிர் – நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வள்ளியின் கணவன் சிறுகதைக்கு ஆறுதல் பரிசு

2.   தினமணி சிறுவர் மணி நடத்திய சிறுகதைப் போட்டியில் வீடு சின்னது சிறுகதைக்கு ஆறுதல் பரிசு

3.   குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் உயிருள்ள மெழுகு சிறுகதைக்கு ஆறுதல் பரிசு

4.   அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிடிபட்டவன் சிறுகதைக்கு முதல் பரிசு

5.   கலை இதழ் சார்பில் ‘பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள்” சிறுகதை அந்த ஆண்டில் வெளிவந்த சிறுகதைகளுள் சிறந்த சிறுகதையாகத் தேர்வு.

6.   திண்டிவனம் ராசி அமைப்பு நடத்திய சிறுகதைப் போட்டியில்

சுடுநிழல் சிறுகதைக்கு சிறப்புப் பரிசு

7.   இலக்கியப் பீடம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இந்தியச் சோறு சிறுகதைக்கு முதல் பரிசு

8.   அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் அய்யனார் உறக்கப் பாட்டு சிறுகதைக்கு ஆறுதல் பரிசு

9.   இலக்கியப் பீடம் நடத்திய சிறுகதைப் போட்டியில் வாக்கு சிறுகதைக்கு ஆறுதல் பரிசு

10. அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் விசும்பல் சிறுகதைக்கு ஆறுதல் பரிசு

11. கிழக்கு வாசல் உதயம் லயன்ஸ் கிளப் இணைந்து நடத்திய  சிறுகதைப் போட்டியில் நடுகல் சிறுகதைக்கு முதல் பரிசு

12. எழுத்தாளர் வே.சபாநாயகம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் சுழியம் (வசீரும் லீலாவதியும்) சிறுகதைக்கு முதல் பரிசு

13.  எழுத்தாளர் ராஜகுரு நினைவுச் சிறுகதைப் போட்டியில் கொடுங்கனவு  சிறுகதைக்கு ஆறுதல் பரிசு 2020

14. எழுத்தாளர் ராஜகுரு நினைவுச் சிறுகதைப் போட்டியில் திண்ணை  சிறுகதைக்கு ஆறுதல் பரிசு 2021

15. நன்னன் குடி நடத்திய சிறுகதைப் போட்டி 2021-ல் செங்காந்தள் சிறுகதைக்கு முதல் பரிசு

16. ‘பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள்’ நூலுக்கு தாரைப் புள்ளிக்காரர் அறக்கட்டளை விருது

17. இலங்கை பாலுமகேந்திரா நூலகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பாரதூரம்’ சிறுகதைக்கு இரண்டாம் பரிசு

18. ஐக்கிய அரபு எமிரெட்ஸ் எழுத்தாளர்கள் விமர்சகர்கள் நடத்திய விமர்சனப் போட்டியில் இடக்கை நூலுக்கான விமர்சனத்திற்கு ஆறுதல் பரிசு

19. ‘நட்சத்திரங்களைத் துணைக்கழைப்பவள்’ நூலுக்கு சௌமா இலக்கிய விருது (அக்டோபர் 30, 2020 மணப்பாறையில்)

20. குமுதம் கொன்றை இலக்கிய அமைப்பு இணைந்து நடத்திய சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டியில் ‘இறை போல் நிறைந்தவன்’ சிறுகதைக்கு ஆறுதல் பரிசு

21. இராமகிருஷ்ண விஜயம் இதழ் நடத்திய இராமானுஜர் 1000 ஆண்டு சிறுகதைப் போட்டியில் திருவோலை சிறுகதைக்கு ஆறுதல் பரிசு.

22. நம் பதிப்பகம் நடத்திய கலை இலக்கியா சிறுகதைப் போட்டியில் பேரமைதியின் ஓசை சிறுகதைக்கு பரிசு

23. நட்சத்திரங்களைத் துணைக்கழைப்பவள் நூலுக்கு சென்னை படைப்பாளர் சங்கம் சிறுகதை நூலுக்கான மூன்றாம் பரிசு

24. பேக்கிடேர்ம் டேல்ஸ் மற்றும் உக்யூட்டோ ப்ப்ளிஷர்ஸ் இணைந்து அறிவித்த ‘தபால்’ குறித்த குறுநாவல் போட்டியில் தேர்வான ‘வாசிக்கப்படாத கடிதம்’ என்னும் குறுநாவல் நூலாக வெளிவந்துள்ளது 2021ஆம் ஆண்டு..

25. சஹானா இணைய இதழ் சிறுகதைப் போட்டியில் ‘மழைத்தூறல் போல் கோடிட்ட சந்தனச் சட்டை’ சிறுகதைக்கு சிறப்புப் பரிசு.

26. இலக்கியப் பீடம் நடத்திய சிறுகதைப் போட்டி(2022)யில் ‘கடவுளின் விரல்’ சிறுகதைக்கு சிறப்புப் பரிசு (பரிசளிப்பு ஏப்ரல் 9 சென்னை மாம்பலம் சந்திர சேகர் திருமண மண்டபம்)

27. பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டி 2022 –ல் வெறியாட்டு சிறுகதைக்கு சிறப்புப் பரிசு (அறிவிப்பு சித்திரை முதல் தேதி)

28. படைப்பு அமைப்பினர் சார்பில் அறிவிக்கப்பட்ட ஹைநூன் பீவி சிறுகதைப் போட்டியில் ‘குருத்து அகம் விரித்து’ சிறுகதைக்கு சிறப்புப் பரிசு

29. நன்னன் குடி சார்பில் அறிவிக்கப்பட்ட இரா. செம்மல் நினைவுச் சிறுகதைப் போட்டி 2022 - யில் புத்தரின் ‘பேராசைப் பல்’ சிறுகதைக்கு ஐந்தாம் பரிசு

30. சென்னைத் தலைமைச் செயலகம் குறிஞ்சி தமிழ் மன்றம் நடத்திய கவிதைப் போட்டியில் தொடர்ந்து எட்டு  வாரங்கள் கலந்து கொண்டு ஆறு வாரங்கள் சிறந்த கவிதைகளில் ஒன்றாக நான் எழுதிய கவிதைகள் தேர்வாகின..

31. கொலுசு –குவிகம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘சொல்லால் வரைந்த வாள்’ சிறுகதைக்கு மூன்றாம் பரிசு

32. தமிழ்ப் பல்லவி  இலக்கிய இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘கெலிங்’ சிறுகதைக்கு மூன்றாம் பரிசு

33.  தமிழ்ப் பல்லவி  இலக்கிய இதழ் நடத்திய கவிதைப் போட்டியில் ‘சலதாரை’ கவிதைக்கு ஆறுதல் பரிசு

34. ஸீரோ டிகிரி பதிப்பகம் 2022 ஆம் ஆண்டு நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘உயிரின் ஒலி’ சிறுகதை சிறந்த சிறுகதைகள் பத்தில் ஒன்றாக தேர்வு

35. எழுத்தாளர் ராம சுப்பையா அறக்கட்டளை 2022 ஆம் ஆண்டு நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘சலஞ்சலம்’ சிறுகதை சிறந்த சிறுகதைகள் பன்னிரெண்டில் ஒன்றாக தேர்வு. அந்தப்போட்டியின் கதைகள் ஒரு நூலாக வெளிவந்துள்ளது.  அந்த நூலின் தலைப்பாக சலஞ்சலம்  என்பதையே தேர்வு செய்துள்ளார்கள்

36. திரு கணேஷ் பாலா அவர்கள் முகநூலில்  அறிவித்திருந்த ஓவியத்துக்கான சிறுகதைப் போட்டியில் போதையுறக்கம் சிறுகதைக்கு மூன்றாம் பரிசு

37. எழுதுகிறேன் ஒரு கடிதம் முகநூல் வழியாக நடத்திய கடிதப் போட்டியில் சிறப்புப் பரிசு

38. மதுரை சத்யா நடத்திய குழந்தைகள் தின கவிதைப் போட்டியில் சிறப்புப் பரிசு

39. கணையாழி இலக்கிய இதழ் நடத்திய செண்பகம் ராமசாமி குறுநாவல் போட்டி 2022-இல் ‘ஒரு மிடறு தேநீர் என்பது.... என்னும் குறுநாவலுக்கு இரண்டாம் பரிசு.

40.  செய்திஅலை டிஜிட்டல் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘ஒரு துண்டு ரயில்’ சிறுகதைக்கு மூன்றாம் பரிசு

41. பேசும் புதிய சக்தி இதழ் நடத்திய எழுத்தாளர் ராஜகுரு நினைவுச் சிறுகதைப் போட்டியில் ‘மரகதப்புறா’ சிறுகதைக்கு சிறப்புப் பரிசு

42. இலக்கியப் பீடம் 2022 விக்கிரமன் நினைவுச் கவிதைப் போட்டியில் ‘அப்பாக்களின் உலகம்’ கவிதைக்கு முதல் பரிசு.

43.  சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய உலகளாவியச் சிறுகதைப் போட்டியில் பூதத்தாள்வார் சிறுகதைக்கு சிறப்புப் பரிசு.

44. மின்கிறுக்கல் நடத்திய வரலாற்றுச் சிறுகதைப் போட்டியில் துரோகத்தின் கண்கள் சிறுகதைக்கு முதல் பரிசு

45. கல்லக்குறிச்சி மாவட்ட தமிழ்ச் சங்கம் நடத்திய நூல் போட்டியில் கட்டுரை நூல்கள் பிரிவில் “பாதை தந்த பயணிகள்” நூலுக்கு முதல் பரிசு

46. துகள் சிறுகதைப் போட்டியில் “தேனீக்களின் நடனம்” சிறுகதைக்கு சிறப்புப் பரிசு

47. கனடா வான்கூவரில் வசிக்கும் ஜி. சத்யா மற்றும் Becareful book இணைந்து நடத்திய அன்னையர் தின கவிதைப்போட்டியில் தேர்வு செய்யப்பட்ட பத்து கவிதைகளில் ஒன்றாக “அன்னையை மறத்தல் மிக எளிது” கவிதைக்கு ஆயிரம் ரூபாய் பரிசு  

48. நன்னன் குடி அமைப்பு நடத்திய சிறுகதைப் போட்டி 2023- இல் ஒரு ரூபாய்க்கு மேல் ஒரு ரூபாய் கூட வேண்டாம்” சிறுவர் சிறுகதைக்கு இரண்டாம் பரிசு.

49.  கம்பம் தமிழ் இலக்கியப் பேரவை நடத்திய சிறந்த கட்டுரை நூலுக்கான இரண்டாம் பரிசு “பாதை தந்த பயணிகள்” நூலுக்கு

50. எழுத்தாளர் செ.ராம.சுப்பையா நினைவு அறக்கட்டளை நடத்திய சிறுகதைப் போட்டியில் சிறந்த கதைகளில் ஒன்றாக  “44” சிறுகதை தேர்வு.  

51. ஸீரோ டிகிரி இலக்கிய விருது -2023 க்கான நாவல் போட்டியில் சிறந்த ஐந்து நாவல்களுக்கான குறும்பட்டியலில் குற்றியலுகரம் நாவல் இடம் பிடித்தது

52.  ஸீரோ டிகிரி இலக்கிய விருது -2023 க்கான சிறுகதைப் போட்டியில் சிறந்த பத்து  சிறுகதைகளில் ஒன்றாக காந்தியின் கூர் சிறுகதை  இடம் பிடித்தது

53.  திரு கணேஷ் பாலா முகநூல் பக்கம் சார்பாக நடத்திய கதை எழுதலாம் வாங்க -8 போட்டியில் சாந்தா கிராஸ் என்னும் சிறுகதை இரண்டாம் இடம் பிடித்தது.

விருதுகள்

1.   நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி 2003 ஆம் ஆண்டு சிறந்த எழுத்தாளர் விருது

2.   திருவில்லிபுத்தூர் கலை இலக்கிய அமைப்பு வழங்கிய சிறந்த எழுத்தாளர் விருது

3.   நெய்வேலி தென்றல் இலக்கிய அமைப்பு வழங்கிய தமிழ்த் தென்றல் விருது

4.   நெய்வேலி பவர் சமூக அமைப்பு வழங்கிய விருது

5.   நெய்வேலி இலக்கியச் சங்கமம் வழங்கிய இலக்கிய விருது

6.   நெய்வேலி ரோட்டரி சங்கம் வழங்கிய பாராட்டுச் சான்று

தொடர்கள்

1.   கிழக்கு வாசல் உதயம் இதழில் பெண் போராளிகள் பற்றிய கட்டுரைத் தொடர் பின்னர் கண்ணுக்குத் தெரியாத காற்று என்கிற பெயரில் நூலாக வெளிவந்தது.

2.   தினத்தந்தியில் சனிக்கிழமை தோறும் முத்துச்சரம் பகுதியில் அதிசயங்களின் இரகசியங்கள் என்கிற தலைப்பில் வெளியான கட்டுரைத் தொடர் பின்னர் அதே பெயரில் புத்தகமாக தினத்தந்தி பதிப்பகம் சார்பில் வெளியானது

3.   தினத்தந்தியில் சனிக்கிழமை தோறும் முத்துச்சரம் பகுதியில் பழம் பெருமை பேசுவோம் என்கிற தலைப்பில் வெளியான கட்டுரைத் தொடர் பின்னர் அதே பெயரில் புத்தகமாக விகடன் பதிப்பகம் சார்பில் வெளியானது

4.   தினத்தந்தியில் சனிக்கிழமை தோறும் முத்துச்சரம் பகுதியில் பாதை தந்த பயணிகள் என்கிற தலைப்பில் வெளியான கட்டுரைத் தொடர் பின்னர் புஸ்தகா வெளியீடாக நூலாக வெளிவந்தது

5.   தஞ்சை சௌந்திர சுகன் மாத இதழில் உலக சினிமா குறித்து எழுதிய விழித்திரையில் நிற்கும் பிற மொழித் திரைப்படங்கள் என்னும் கட்டுரைத் தொடர் பின்னர் அதே பெயரில் நிவேதிதா பதிப்பகம் சார்பில் நூலாக வெளிவந்தது

6.   நிழல் காலாண்டு இதழில் கலகக்கார கலைஞர்கள் என்னும் தலைப்பில் வெளிவந்த தொடர் பின்னர் புஸ்தகா வெளியீடாக நூலாக வெளிவந்தது

7.   ஹே ராம் என்றொரு திரைத்தவம் என்னும் தலைப்பில் ஹே ராம் திரைப்படம் பற்றிய தொடர் கொலுசு மாத இதழில் ஜூலை 2023 முதல் வெளியாகிறது.

8.   ஆக மொத்தம்  மூன்று கவிதைத் தொகுதிகள், நான்கு சிறுகதைத் தொகுதிகள், எடிசனின் வாழ்க்கை வரலாறு, ஒரு குறுநாவல், ஏழு கட்டுரைத் தொகுதிகள், ஒரு நாடக நூல்  ஆக மொத்தம் பதினேழு நூல்கள் வெளியாகி உள்ளன.

8. மலையாள மனோரமா இயர் புக் தமிழ் பதிப்பில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வெவ்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றன

9. முதல் சிறுகதைத் தொகுப்பான முற்றுப்பெறாத மனு நூலை திருவண்ணாமலையைச் சேர்ந்த சங்கீதா என்பவர் எம்.பில் பட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்

10. கணையாழியில் வெளியான பிராது என்னும் சிறுகதைக் குறித்து நெய்வேலியைச் சேர்ந்த எம்பில் பட்ட ஆய்வாளர் பெண்மணி ஒருவர் ஆய்வு செய்து சமர்ப்பித்திருக்கிறார்.

11. நெய்வேலி ஜெசிஸ் அமைப்பு சார்பில் கோடைக்கால சிறப்புப் பயிற்சி முகாமில் ஒரு நாள் முழுக்க மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்சி பயிலரங்கு ஒன்றை நடத்தியது

12. பொள்ளாச்சியில் கொலுசு இலக்கிய இதழ் ஆண்டு நிறைவையொட்டி ஒருங்கிணைத்த, கிட்டதட்ட 130 பேர் பங்கேற்ற  சிறுகதைப் பயிலரங்கினை நடத்தியது

13. கொலுசு ஜனவரி 2023 இதழில் என்னுடைய விரிவான நேர்காணல் அட்டைப்படத்துடன் வெளிவந்துள்ளது 

 

படைப்புகள் பிரசுரமான இதழ்கள்

1.   ஆனந்த விகடன் 2. தினமணிகதிர் 3. தினமணி சிறுவர் மணி 4. கல்கி 5. சௌந்தர சுகன் 6. தினத்தந்தி 7. கணையாழி 8. குமுதம் 9. தமிழ் இந்து 10. நிவேதிதா 11. தேவி 12.  திருப்புமுனை 13. கிழக்குவாசல் உதயம் 14. நிழல் 15. பேசும் புதிய சக்தி 16.காக்கைச் சிறகினிலே 16. இலக்கியப் பீடம் 17. மனோரமா இயர் புக் தமிழ் பதிப்பு 18 பொதிகை மின்னல் 19. யுகமாயினி 20. நிறை 21. வெய்யில் நதி 22. சங்கு 23. தமிழ்ப் பல்லவி 24. தாராமதி 25. தாமரை 26. கல்கி தீபாவளி மலர் 27. இனிய உதயம் 28. கல்வெட்டுப் பேசுகிறது. 29. அம்ருதா. 30. இராமகிருஷ்ண விஜயம்.

31. பூங்குயில்  32. கொலுசு 33. புதிய புத்தகம் பேசுது  34. கொலுசு

 

பொறியாளர் செந்தில் குமார்

1. என்.எல்.சி நிறுவனம் சார்பில் சென்னை சாப்டர் நடத்திய தரக்கட்டுப்பாட்டுக் குழுக்களுக்கு இடையிலான போட்டியில் ஓசூர் நகரில் குழுத் துணைத்தலைவராக வெள்ளிப் பதக்கம். 2014

2. சென்னை சாப்டர் சார்பில் சென்னை நகரில் நடந்த தரக் கட்டுப்பாட்டுக்குழு போட்டியில் குழு துணைத் தலைவராக தங்கப் பதக்கம் 2015

3. மைசூரில் நடந்த அகில இந்திய தரக்குழுப் போட்டியில் குழுத் துணைத்தலைவராக எக்சலண்ட் விருது 2015

4. கோவையில் நடந்த சென்னை சாப்டர் தரக்குழுப் போட்டியில் குழுத் துணைத்தலைவராக தங்கப் பதக்கம் 2016

5. சத்தீஷ்கர் மாநிலம் ராய்ச்சூரில் நடைபெற்ற அகில இந்திய தரக்கட்டுப்பாட்டு குழுப் போட்டியில் குழுத் துணைத் தலைவராக பார் எக்சலண்ட் எனப்படும் அதி உயர் நிலை விருது 2016

6. சென்னையில் நடைபெற்ற சென்னை சாப்டர் தரக்குழுப் போட்டியில் குழுத் துணைத்தலைவராக தங்கப் பதக்கம் 2017

7. மத்தியப்பிரதேசம் குவாலியர் நகரில் நடைபெற்ற அகில இந்திய தரக்குழுப் போட்டியில் குழுத் துணைத்தலைவராக எக்சலண்ட் விருது 2017

8. சுரங்கம் 1A நிலநீர் கட்டுப்பாட்டுக் கோட்டம் பகுதியில் மின்னியல் பிரிவில் நீர் இறைக்கும் பம்புகள் மின் நிறுத்தம் ஆகாமல் 2021 ஆம் ஆண்டு மழைக்கால நேரத்தில் கடுமையாக பணி செய்து மூன்று Electrical Feeder களை தற்காலிகமாக உருவாக்கி வெற்றிகரமாக இயக்கியமைக்காக என்.எல்.சி நிறுவனம் STAR OF THE MONTH என்கிற சிறப்பை 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் 75 ஆம் சுதந்திர தினத்தில் வழங்கி கௌரவித்தது

 

பிற பங்களிப்புகள்

1.   நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி குறும்படப் போட்டித் தேர்வுக் குழுவில் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இடம் பெற்றது

2.   நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி சிறந்த எழுத்தாளர், சிறந்த பதிப்பகத்தார், தினம் ஒரு நூல் வெளியீட்டுக் தேர்வுக் குழுவில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இடம் பெற்றது

3.   சென்னை பொதிகைத் தொலைக்காட்சியில் சுடர் சிறுகதை நாடகமாக ஒளிபரப்பானது.

4.   புதுவை வானொலி நிலையத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று நாடகம், புலவர்களின் புரவலன் நாடகம், தம்பி நல்ல தம்பி ஆகிய நாடகங்கள் ஒலிபரப்பானது

5.   புதுவைத் தொலைக்காட்சி நிலையத்தில் எந்தையும் தாயும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றியது

6.   சென்னைப் பொதிகைத் தொலைக்காட்சியில் நேர்காணல்

7.   திசை எட்டும் ஆசிரியர் குழுவில் இடம் பெற்று மூன்று வெவ்வேறு ஆண்டுகளில் திசை எட்டும் விருதுக்கான நூலைத் தேர்வு செய்யும் நடுவராகப் பணியாற்றியது.

8.   நெய்வேலி குளுனி பள்ளி ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவில்  கதை மற்றும் வசனம் எழுதி அரங்கேற்றப்பட்ட தமிழ் நாடகம்

9.   உலக தாய்ப்பால் வார விழாவுக்காக தொடர்ந்து நான்கு ஆண்டுகள் விழிப்புணர்வு நாடகம் கடலூர் மாவட்ட குழந்தை நல மருத்துவர் சங்கம் நடத்திய நிகழ்வுகளில் வெவ்வேறு விழிப்புணர்வு நாடகங்கள்

10. நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் ஒற்றாடல் துறை நடத்தும் ஒற்றாடல் வார விழாவிற்காக விழிப்புணர்வு மேடை நாடகம்

11. நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் ஒற்றாடல் துறை நடத்தும் ஒற்றாடல் வார விழாவிற்காக கறை குறும்படம் இயக்கி திரையிட்டது.

12.  சென்னை குறும்பட விழாவில் பாரதிக்குமார் இயக்கிய அகில் மற்றும் கறை குறும்படங்கள் திரையிடப் பட்டன.

13. ஆதரவு என்கிற ஆவணப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி எடிட்டர் லெனின் அவர்களால் பாராட்டுப் பெற்றது.

14. நெய்வேலி செல்வன் இயக்கிய ஆசிரியைக்கு அன்புடன் என்கிற ஆவணப்படத்தில் ஒரு ஆசிரியரின் வாழ்வு பற்றிய கவிதை இடம் பெற்றது.

15. நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் ஒற்றாடல் துறை நடத்தும் ஒற்றாடல் வார விழாவிற்காக அறிவிக்கப்பட்ட குறும்படப் போட்டித் தேர்வுக் குழுவில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக ஜூரியாக பணி

16. நெய்வேலி நேஷனல் கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட கதை சொல்லல் போட்டிக்கான நடுவராக பணி

17.  தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறைக்காக கொரானா விழிப்புணர்வு குறும்படங்களுக்கான கதை, திரைக்கதை, வசனம் எழுதியது

18. பாரதிராஜாவின் உதவி இயக்குனர் திரு வேல்முருகன் இயக்கிய அந்த மூன்று நாட்கள் குறும்படத்திற்கு வசனம் மற்றும் பாடல் எழுதியது

19. ராஜராஜன் வெப்சீரீஸ்-க்காக பத்து எபிஸோட்களுக்கு வசனம் எழுதியது.

20. மன்னார் வளைகுடா திரைப்படத்திற்கு வசனம்

21. நாநா திரைப்படத்திற்கு வசனம்

22. இயக்குனர் விக்கி இயக்கிய பைலட் மூவி “Break up” க்காக ‘உன் சொல்லால் என்னைக் கொன்றுவிட்டாய்’ என்கிற பாடல் எழுதியது.

23. 12 செகண்ட்ஸ் திரைப்படம், மா திரைப்படம், இன்று போய் நாளை வா திரைப்படம் ரதம் திரைப்படம் ஆகியவற்றுக்காக வசனம் எழுதியது மற்றும் திரைக்கதையாக்க ஆலோசனையில் இடம் பெற்றது

24.  கோல்டன் சில்க்ஸ் கடைக்கான விளம்பர ஜிங்கிள்ஸ் இரண்டு பாடல்கள் எழுதியது.

25. நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கியக் கூட்டங்களில் வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறு ஊர்களில் உரையாற்றியது

26. என்.எல்.சி பற்றிய ஆவணப்படம் பற்றிய ஆலோசனைக்குழு மற்றும் என்.எல்.சி நூலக புத்தகங்கள் தேர்வுக்குழு ஆகியவற்றில் இடம் பெற்றது.

27.  என். எல்.சி நிறுவனம் வெளியிட்ட பிரவுன் கோல் என்னும் நிறுவன ஆங்கிலச் செய்தி இதழின் பத்தி செய்திகளை மின்மலர் என்னும் இதழுக்காக சில பிரதிகளுக்கு தமிழில் மொழியாக்கம் செய்தது.

28. சென்னைப் பொதிகைத் தொலைக்காட்சியில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டது.   

29.  ஹிமாலயா சோப் விளம்பரத்துக்கான வாசகங்கள் எழுதித் தந்தது.

30. பொம்மலாட்டம் திரைப்பட விளம்பர வாசகங்கள் எழுதித் தந்தது.

31. கல்கி தீபாவளி மலருக்காக நூறாண்டு தமிழ் சினிமா பற்றிய நெடுங்கட்டுரை எழுதி வெளியானது.

32. ராஜராஜன் என்னும் வெப் சீரீஸ்- க்காக பத்து அத்தியாயங்களுக்கு வசனம் எழுதித் தந்தது.

33. சென்னை கலந்துரையாடல் குழு , நெய்வேலி சம்ஸ்கிருத அமைப்பு சங்கதம், ஆத்தூர் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி, சென்னை தமிழ் அமுதம்  ஆகியவற்றின் சார்பில் நிகழ்த்தப்பட்ட இணைய வழி கூட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தியது.

34. இயக்குனர் சந்தோஷ் எடுக்கவிருக்கும் ஒரு வெப் சீரீஸ்க்காக ஒரு பாடல் எழுதித் தரப்பட்டது.

35. எழுத்தாளர் கிரா அவர்களுடைய படைப்புகள் பற்றிய பல்வேறு இலக்கியவாதிகள் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பில் கட்டுரை இடம் பெற்றது.

36. எழுத்தாளர் இராசேந்திர சோழன் அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை தொகுப்புக்காக எழுதிய ஆய்வுக்கட்டுரை

37. திசை எட்டும் , புத்தகம் பேசுது இதழ்களில் பல்வேறு நூல்கள் பற்றிய விமர்சனக் கட்டுரைகள் கல்கி இதழில் குறும்படங்கள் பிறமொழிப் படங்கள் பற்றிய கட்டுரைகள் எழுதியது  

38. இயக்குனர் உத்தராசாமி உருவாக்கும் இசைத் தொகுப்பிற்காக இசை அமைப்பாளர் ஜோ ஸ்மித் உருவாக்கிய இசைக் கோர்வைக்கு (tune) சிலு சிலுன்னு சாரல்தான் என்னும் பாடல் எழுதித் தந்தது  

39. பாரதிராஜாவின் உதவி இயக்குனர் திரு வேல்முருகன் இயக்க இருக்கும் வடிவு ஆகிய நான் திரைப்படத்திற்கு தற்சமயம் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளேன் இன்னும் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. 

40. வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்களின் ஐம்பது ஆண்டுகால திரைப்பயணத்தை பாராட்டி அவருக்கு நடைபெறும் விழாவுக்காக இயக்குனர் திரு பிரேம்நாத் இயக்கும் காணொளி படத்திற்கான முழு எழுத்து வடிவத்தை எழுதித் தந்தது.

 

 

இணைப்புகள்

 

1.   பொதிகைத் தொலைக்காட்சி நேர்காணல்

  https://www.youtube.com/watch?v=SDMiQGly7wM 

  .2. புதுச்சேரி தொலைக்காட்சி எந்தையும் தாயும் நிகழ்ச்சி

      https://www.youtube.com/watch?v=94V4kMVVJpk

2.   மன்னார் வளைகுடா திரைப்பட ட்ரெயிலர்

      https://www.youtube.com/watch?v=QChCtDdiUAU

Tamil Speach you tube channel –இல் நெய்வேலி பாரதிக்குமாரின் பெருங்கடன் சிறுகதையை வாசிக்கிறார் எழுத்தாளர், கதைச் சொல்லி பட்டுக்கோட்டை ராஜா அவர்கள்..

https://www.youtube.com/watch?v=hXM0rIEL9sY

 

 

 

 

 .

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...