திங்கள், 22 ஆகஸ்ட், 2016

ரேமுண்டோ கிளேசியர்

கலகக்கார கலைஞர்கள் -8

            

               சிறுகுழந்தைகள் கூட்டம் மிகுந்த சூழல்களில் தொலைந்து போவதும், பின்னர் பதற்றத்துடன் கண்டுபிடிக்கப்படுவதும் அனேகமாக எல்லோரது வாழ்விலும் ஏதோ ஒரு தருணத்தில் நிகழ்கிற சம்பவம்தான். தொலைந்து போனவர்கள் திரும்பவே இல்லை என்றால் அந்த துயரத்தை யாரால் தாங்கிக் கொள்ளமுடியும்? அதுவும் நல்ல வாலிபமான வயதில், ஒரு குடும்பத்தை தாங்கி நிற்கின்ற பொறுப்பில், சமூகத்தின் சொத்தாக விளங்கும் கலைஞனாகவோ, இலக்கியவாதியாகவோ இருந்துவிட்டால் எப்படியான இழப்பாக இருக்கும்?
               தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் 1976 க்கும் 1983க்கும் இடைப்பட்ட காலத்தில் இப்படியாக தொலைந்து போனவர்களின் எண்ணிக்கை 30000 க்கும் மேற்பட்டவர்கள் என்கிறார்கள். மேற்கண்ட காலகட்டத்தில் அர்ஜெண்டினாவை ஆண்டுவந்த இராணுவ ஆட்சியாளர்களை எதிர்த்து வந்த சிந்தனையாளர்கள், இடதுசாரிகள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் என பலரும் இதில் அடங்குவர். ஆவணப்பட மற்றும் திரைப்பட இயக்குனர் ரேமுண்டோ கிளேசியரும் அதில் ஒருவர்.

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...